ஏட்டுசாமிக்கு நான்னா
உசிரு. வண்டி கழுவனு
சீரட்டு வாங்கியாரனு
பொழுதோட வாரையில
அஞ்சு ரோவா தருவாரு
நாட்டு வெத்தல ரெண்டு
அம்ப்தாசு நெஜாம் பாக்கு
வாங்கியாந்தா சிரிப்பாரு
மனீகாரு.
ஊர் கவுன்ட்ருக்கு
ரெண்டூடு. பெரீய் கவுனிச்சி
ரெம்ப நல்ல டைப்பு.
சின்னக் கவுனிச்சிக்கு
என்னையக் கண்டாலே
ஆவாது.
நோம்பி கீம்பி சாட்டுனா
நானாருன்ருகீங்க?
ராசாவாக்கும்.
நானில்லாட்டி
ஒண்ணுன் நெடக்காது
இந்தூர்ல அல்லாருக்கு
ஒரு சாமி தா
நமக்கு அல்லாருமே
சாமி தா.
No comments:
Post a Comment