Thursday 15 December 2011

மோகச்செருக்கு

காதலும் காமமும்
ஒரு சேர இயங்கின
நாட்களைக் கடந்தாயிற்று.

இரண்டும் தனித்தனியே
துரிதமாக என்னை
இயக்குகின்றன

இவ்விரண்டின்
எதிரெதிர் இழுப்புகளில்
பிய்ந்து போகிறது
மெய்யுயிர்.

No comments:

Post a Comment