ரங்கய்யா தெருவா இது.?
இடது திருப்பத்தில்
ஒன்றல்ல இரண்டு
தென்னை மரங்கள்
நான்கைந்து நாய்கள்
ஊளையிட்ட தெரு
வாகனக் கூட்டத்தில்
நெருக்கப்பட்டிருக்கிறது.
"கோபால் மெஸ்"
பெயர்ப்பலகையின் கீழ்
மொய்க்கிற மக்களை
இப்போது பார்க்கிறேன்.
பேருந்து நிழல் குடையில்
போத்தீஸ் விளம்பரம்
வீட்டு வாசலில்
துளசிச் செடி.
கொடியில் உலரும்
நீலப் புடவை
ஊதா ரவிக்கை
அன்றாடம் கடந்து
போகும் பாதை
இன்றெனக்கு
அந்நியப்படுகிறது.
கதவு திறக்கப்படுகிறது.
முதன் முறை
பகலில் பார்க்கிறேன்
அவளை.
No comments:
Post a Comment